பெரஹரவிற்கு அழைத்துவந்த யானை தாக்கி இருவர்பலி!

இரத்தினபுரி – ரக்வானை பகுதியில் விகாரையொன்றில் நடைபெற்ற பொசன் பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யானைப் பாகனின் உதவியாளர், யானைகளில் ஒன்றுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக யானையை ரக்வானை ஆற்றிற்கு அழைத்துச்சென்றபோது உதவியாளரைத் தாக்கிக் கொன்றுள்ளது.

உதவியாளரை காப்பாற்ற வந்த பாகனையும் யானை தாக்கிக் கொன்றுள்ளது.

அதனையடுத்து யானைக்கு மயக்க மருந்து கொடுத்து அதனைப் பிடிப்பதற்கா நடவடிக்கைகளை வன விலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version