மயிலிட்டி மக்கள் 13 ஆவது வெள்ளியாகவும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்கக்கோரி யாழ். மயிலிட்டி மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று 13 ஆவது வெள்ளிக் கிழமையாகவும் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில், வலி வடக்கு ஜே/248, ஜே/251, ஜே/246 மற்றும் ஜே/255 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் ஈடுபட்டனர்.

யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தங்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவித்து குறித்த மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version