இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில்(31) இடம்பெற்று வருகிறது.


இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்திய துணை தூதுவர் சாய்முரளி, தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ். இராமலிங்கம், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த நிகழ்வின்போது மாவை சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு மலரும், பேராசிரியர் பாஞ். இராமலிங்கம் எழுதிய ஈழ அண்ணன் மாவை சோ.சேனாதிராசா நூலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.



செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!