மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் நேற்று (03) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க, சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் மேலதிக மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது வெற்றிடமாக காணப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவிக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !