மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்!

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் நேற்று (03) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க, சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் மேலதிக மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது வெற்றிடமாக காணப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவிக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

Exit mobile version