யாழில் சட்டவிரோதமாக் கடலட்டை பிடித்த இருவர் கைது:4111 அட்டைகள் மீட்பு!

யாழ்ப்பாணம், கொழும்புதுறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்த 4111 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று(03) மாலை 6:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கடற்படையினர் மற்றும் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

கைதான இருவரும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் ஊடாக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

Exit mobile version