யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அகற்றக் கோரி, பிரதேச மக்களால் இன்று (20) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” எனும் கோஷத்தை எழுப்பியவாறு மாதுபானசாலை முன்பாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கிராம மக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலை சிறார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version