யாழ்.செம்மணியில் இன்றும் 7 என்புக் கூடுகள் அடையாளம்!

யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து இன்றைய தினம் (22) 7 மனித என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 31 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று இடம்பெற்றன.

இதனடிப்படையில், இதுவரை 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் 390 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version