யாழ். செம்மணி மனிதப் புதைகுழி 43ஆம் நாள் அகழ்வில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி, மூன்றாம் கட்டத்தின் 43 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் (4) முன்னெடுக்கப்கட்டன.

இதன்போது 4 மனித என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை முன்னர் அடையாளம் காணப்பட்ட என்பு இரண்டு மனித என்புக்கூடுகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைந மொத்தமாக 483 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் 481 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version