வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையோடு யாழ். தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையோடு யாழ். தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்திய கண்காட்சி, தென்மராட்சி பிரதேச செய கண்காட்சி, தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(25) இடம் பெற்றது.



ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை மற்றும் மனைப் பொருளியல் கண்காட்சியாக இந்தக் கண்காட்சி இடம்பெற்றது.



இந்த கண்காட்சியை வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் பா. கஜானி, தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்ஸிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன், தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், ஆகியோர் இணைந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.



மேலும் இந்த நிகழ்வில், உதவிப் பிரதேச செயலர் நிருபராஜ் லாகினி, மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். சுனேத்திரா ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !