யாழ்.மறை மாவட்ட புதிய ஆயர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம்!

யாழ். மறை மாவட்ட புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் யாழ்.மறைமாவட்டத்திற்கு இன்று (01) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில், குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளால் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் அவர் ஈடுபட்டார்.

Exit mobile version