யாழ். மாதகலில் விபத்து – சம்பவ இடத்திலேயே முதியவர் பலி!

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வாகனமும் முதியவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்போது நல்லையான் வீதி, சில்லாலையை சேர்ந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version