வடக்கு கிழக்கில் அதிகளவு மாற்றுத் திறனாளிகள் உருவாக போரின் விளைவே காரணம்: பிரதமர்!

போரின் கசப்பான விளைவால், அதிகளவான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வசித்து வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று(22) இடம்பெற்ற பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகளுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், வடக்கிலும் கிழக்கிலும் அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளபோதிலும், இன்னும் ஒரு சில பகுதியே விடுவிக்க வேண்டி உள்ளது. ஜனாதிபதி காணி விடுவிப்புத் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மாகாண சபை தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும், அது நீதி பொறிமுறைகளுக்கு அமைவாக இடம்பெறும் எனவும் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினர்.

Exit mobile version