யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதான அரங்கு இன்று(23) திறந்து வைக்கப்பட்டது.
லண்டனிலுள்ள வரணி ஒன்றியத்தின் நிதி உதவியில் இராணுவத்தால் இந்த விளையாட்டரங்கு அமைக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.



கல்லூரியின் முதல்வர் ஆர்.கோகுலராகவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் B.K.G.M.L ரொற்றிக்கோ கலந்துகொண்டு மீதான அரங்கை திறந்து வைத்தார்.



மேலும், யாழ் மாவட்ட கட்டளை தளபதி K.J.N.M.P.K.நவரத்ன, இலண்டன் – வரணி ஒன்றியத்தின் இணைப்பாளர் தம்பு செல்வகுமார், அயற்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
செம்மணி மனித புதை குழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!