ஜிம்பாவே மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று(09) நடைபெற்ற உலக கிண்ண 20க்கு20 தொடரில் 8 ஆவது போட்டியில் ஜிம்பாவே அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
நாணய சுழற்சியால் வெற்றி பெற்ற ஜிம்பாவே அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 103 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்பாவே அணி 13 ஓவர்களால் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன் காரணமாக, ஜிம்பாவே அணி குறித்த போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்கு வருகிறது வழி!
பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி!
இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!