யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புல்கொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை (18) இடம்பெற்றுள்ளது.
கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பூனாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு மீனவர்களுக்கு படகுகள் வழங்கி வைப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!
நெடுந்தீவு மகளிரின் பொருளாதார வலுவூட்டலுக்கு நிலையம் திறந்து வைப்பு!
நூதனமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற கும்பல் யாழில் கைது!