வடக்கு மாகாணத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் கடற்றொழில் அமைச்சால் இன்று(18) வழங்கிவைக்கப்பட்டன.
யாழ்.காரைநகர் ‘சீ நோர்த்’ படகு உற்பத்தி நிறுவனத்தில் வைத்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் இந்த படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.



18 லட்சம் பெறுமதியான 32 வலைகளும்,
86 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 18 படகுகளும் இதன்போது வழங்கப்பட்டன.
இதன்போது, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 3 படகுகளும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு 2 படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன.



இந்த நிகழ்வில் ‘சீ நோர்’ தலைவர் வசந்த மான்ன பெரும, சீ நோர் பணிப்பாளர் ரோஹண, யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் எஸ். அகிலன், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பணிப்பாளர்கள், காரைநகர் பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !