வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு அணிகளும் மாகாண மட்டத்தில் சாம்பியன்களாகின.
இறுதிப்போட்டிகள் நேற்று (18) யாழ் வயாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தி்ல் நடைபெற்றன.


20 வயது அணி இறுதிப்போட்டியில் மனிப்பாய் மகளிர் கல்லூரி அணியை எதிர்கொண்டு மகாஜனா கல்லூரி அணி 4:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனானது.
17 வயது அணி இறுதிப்போட்டியில் யூனியன் கல்லூரி அணியை எதிர்கொண்டு மகாஜனா கல்லூரி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.
17 வயது பிரிவு அணி, போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 ஆவது தடவைகளாக மாகாணமட்டத்தில் சாம்பியனாகியுள்ளது.
மேலும் அந்த அணி தேசியமட்டத்தில் தொடர்ச்சியாக 4 தடவைகள் சாம்பியனாகியுள்ளது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !