உலகம்
Trending

பிரான்ஸ், மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளை இணைக்கும் விமான சேவை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

பிரான்ஸின் ‘பிரெஞ்ச் பீ’ விமான சேவை நிறுவனம், பாரிஸிலிருந்து மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இணைக்கும் புதிய விமானச் சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

2026/27 ஆம் ஆண்டின் வட குளிர்காலப் பருவத்தில் இந்த விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் ஏர்பஸ் A350-900 ரக விமானங்களைப் பயன்படுத்தி, பாரிஸ் ஓர்லி,மலே மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையே வாரத்திற்கு இரண்டு முறை இந்த விமானச் சேவை இடம்பெறவுள்ளது.

மேற்படி விமான சேவையானது பிரான்ஸ், மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே நேரடி இணைப்பை ஏற்படுத்துவதோடு, சுற்றுலாப் பயணிகளுக்குக் கூடுதல் பயண வாய்ப்புகளையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது்

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button