
இலங்கைக் குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, நபரொருவரிடமிருந்து 4,990,000 ரூபாய் பண மோசடி செய்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியப் பிரஜையான சந்தேகநபர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த பண மோசடி தொடர்பில் கிளிநொச்சி பிரிவு விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us





