இலங்கை
Trending

உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

உலகளாவிய ஈட்டி எறிதல் போட்டிகளில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் இலங்கை விளையாட்டு வீரர் ருமேஷ் தரங்கவின் ஐந்து ஈட்டிகளும் சந்தேகத்திற்கு இடமான முறையில் உடைக்கப்பட்டுள்ளன.

அவர், துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் TK-730 விமானம் மூலம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து இலங்கை திரும்பிய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடைக்கப்பட்டுள்ள குறித்த ஈட்டிகளில், அவர் சாதனைகள் படைக்கப் பயன்படுத்திய ஈட்டிகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலக சாம்பியனான ருமேஷ் தரங்கவிற்கு அரசாங்கத்தின் செலவில், புதிய ஈட்டிகள் வழங்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, வீரர் தரங்கவின் பயிற்சிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், சர்வதேச தரத்திலான புதிய ஈட்டிகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button