இலங்கை
Trending

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை விரட்டிப்பிடித்த சாவகச்சேரி பொலிஸார்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்.சாவகச்சேரி மறவன்புலவு பிரதேத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றிச் சென்ற உழவு இயத்திரத்தை பொலிஸார் விரட்டிப் பிடித்துள்ளனர்.

மறவன்புலவுப் பிரதேசத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்றிரவு (04) 11.00 மணியளவில் பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.

அங்கு பொலிஸாரின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாது உழவு இயந்திரத்தை வேகமாக ஓட்டிச் சென்றதோடு,பொலிஸாருக்கு தடையை ஏற்படுத்தும் விதமாக மணலை கொட்டியவாறு உழவு இயந்திரத்தைச் செலுத்தியுள்ளனர்.

இறுதியாக உழவு இயந்திரத்தை பற்றைக்குள் விட்டுவிட்டு அதில் பயணித்த ஐவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் உழவு இயந்திரத்தை கைப்பற்றிய பொலிஸார், தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button