
யாழ்ப்பாணம் வலி வடக்கு, பலாலி மக்கள், தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக்கோரி ஐந்தாவது வாரமாகவும் நேற்றும் (19) போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமது சொந்த நிலங்களில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கை மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்துத் தொழில் புரிவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 36 ஆண்டுகளாக நண்பர்கள், உறவினர்களின் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும், அகதி முகாம்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நிலையில், இராணுவத்தினர் அந்த நிலங்களை தமது தேவைகளுக்காக பயன்படுத்திவருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
Follow Us





