
பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மீண்டும் தவடையிடப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின்போது நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் மன்றில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Follow Us





