உலகம்
Trending

ஈரானுக்கு 300 பில்லியன் டொலரை கொடுக்கும் ட்ரம்ப்: அமெரிக்காவில் வெடித்த அரசியல் சர்ச்சை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தத்திலுள்ள 300 பில்லியன் டொலர் நிதியுதவித் திட்டம் அமெரிக்காவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் சுவிட்சர்லாந்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, போரால் பாதிக்கப்பட்ட ஈரானை மறுசீரமைப்பு செய்வதற்காக 300 பில்லியன் டொலர் மதிப்பிலான நிதித் திட்டம் ஒன்றை உருவாக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், இந்த அறிவிப்பு தற்போதைய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே, குறிப்பாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் இச்சூழலில், பெருந் தொகையை ஈரானுக்கு வழங்குவது முறையல்ல என அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் ஆகியோர், இந்த 300 பில்லியன் டொலர் நிதியானது அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து வழங்கப்படாதென தெளிவுபடுத்தியுள்ளனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button