
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும், யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட குணபாடத்துறையும் இணைந்து நாடாத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வு யாழ்.சித்தமருத்துவ பீடத்தில் இன்று(18) இடம்பெற்றது.
இதற்கு முன்னதாக காலையில், நாவற்குழி சந்தி, கைதடி சந்தி ஆகிய இடங்களில் கலைப் பாரம்பரியங்களை நினைவூட்டும் வகையில், யாழ்.சித்தமருத்துவ மாணவர்களின் “தெருக் கூத்து” இடம்பெற்றது.



இந்த நிகழ்வில்,மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ்மாவட்ட உதவிப் பணிப்பாளர் லோறன்ஸ் கிறிஸ்ரி ஆனந், சுதேச மருத்துவ திணைக்கள வடக்கு மாகாண ஆணையாளர் ரி.சர்வானந்தன்,கைதடி சித்த போதனா வைத்தியசாலை பொறுப்பதிகாரி B.பிரபாகரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்புத்தனர்.
Follow Us





