இலங்கை
Trending

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

கொழும்பு பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு(06) ஏற்பட்ட பதற்ற நிலைமையை தொடர்ந்து சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலையின் ‘ஈ’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று, இரவு 10:20 மணியளவில் திடீரென கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பாக கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகலே இந்த மோதலுக்கும் பதற்ற நிலைமைக்கும் காரணம் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதனையடுத்து பொலிஸார், கலவரக் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button