
யாழ் .சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் நேற்று (29) மாலை சிறப்பாக இடம்பெற்றது.


நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க சித்திரத்தேர் வெள்ளோட்டம் சிறப்பாக இடம்பெற்றது.
‘கலாகேசரி’, ‘கலாநிதி’ விஸ்வப்பிரம்மஸ்ரீ சரவணமுத்து ஜெயமோகனின் கைவண்ணத்தில் நீர்வேலி சரவணன் சிற்பக் கலைக்கூடத்தின் 113 ஆவது படைப்பாக இந்த சித்திரத்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Follow Us





