இலங்கை
Trending

டிஜிற்றல் முறையிலான பாடசாலை பேருந்து சேவை யாழ்.கொடிகாமத்தில் ஆரம்பித்து வைப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இலங்கையில் முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு, ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை யாழ்.கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப நிகழ்வில்,

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

சாவகச்சேரி பிரதேச செயலாளர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொது முகாமையாளர், வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத் தலைவர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதற்கமைய தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் முழு ஒத்துழைப்போடு உசனிலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் இந்தச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

உசனிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்துச் சேவையும், உசனிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பேருந்துச் சேவையுமே ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து வசதிக்கான பிரத்தியேகச் சேவையான ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து அரைவாசிப் பயணக் கட்டணமே அறவிடப்படுவதோடு, மிகுதித் தொகை அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படுகின்றது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button