
பழம்பெரும் சிங்களப் பாடகி விஷாரத நந்தா மாலினியின் மறைவையொட்டி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் கலைத்துறைக்கு நந்தா மாலினி ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Follow Us





