இலங்கை
Trending

இலங்கையிலுள்ள நீர்த்தேக்கங்கள் 65 சதவீத கொள்ளளவை கண்டுள்ளன – நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக,இலங்கையிலுள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் உயர்வடைந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து, ஆபத்தான நிலையிலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் வசந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் மொத்த நீர்த்தேக்க கொள்ளளவில் சுமார் 65 சதவீதம் நிரம்பியுள்ளது.

இதில் 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 12 நீர்த்தேக்கங்களும்,6 நடுத்தர நீர்த்தேக்கங்களும் ஏற்கனவே வான்பாய்ந்து வருகின்றன.

இது
தற்போதைய நிலையில் நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் பெரிய அளவில் வெள்ள அபாயம் இதுவரை ஏற்படவில்லை.

இருப்பினும், எதிர்வரும் நாட்களில் மழை அதிகரித்தால் நீர் வெளியேற்றத்தின் அளவு அதிகரிக்கப்படலாம்.

குறுகிய நேரத்தில் பெய்யும் கடும் மழை காரணமாக, ஆறுகள் இல்லாத தாழ்நிலப் பகுதிகளில் கூட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் வசந்த சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button