இலங்கை
Trending

யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டம்: பொலிஸார் ஏற்பாட்டில் சிறப்பு கூடாரக் காட்சி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்.மாவட்ட பொலிஸ் நிலையங்களின் ஏற்பாட்டில், வெசாக் பண்டிகை நிகழ்வும்,வெசாக் கூடாரக் காட்சியும், யாழ். தலைமை பொலிஸ் நிலைய மைதானத்தில் நேற்றிரவு (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்த்தன, யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன,யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா, யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.ஈ.என்.தில்ருக், யாழ்.தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். பாலித செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்,வெசாக் கூடாரங்களை இன்றும் பொதுமக்கள் பார்வையிட முடியும் என யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். பாலித செனவிரட்ன தெரிவித்தார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button