
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்று(17) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.
தனது பணியை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த்து வீதியருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது.
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
Follow Us





