
பாகிஸ்தான் – லாகூர் தனியார் பயிற்சி நிலைய கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதோடு 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் ஆசிரியை ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


சிறுவர்கள் படித்துக்கொண்டிருந்தபோதே கூரையின் ஓடுகள் பழுதுபார்க்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரையின் மீது அதிக எடை ஏற்றப்பட்டதால் கட்டடங்கள் திடீரென இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us





