இலங்கை
Trending

யாழ் – கண்டி வீதியில் விபத்து :ஆசிரியை சம்பவ இடத்தில் பலி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புல்கொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை (18) இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பூனாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button