
வவுனியா புளியங்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு (31) இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்த ரயிலுடன்
புளியங்குளம் 290 ஆவது மைல் கல் அருகில் குறித்த குடும்பஸ்தர் மோதுண்டுள்ளார்.
கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 38 குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
Follow Us





